வெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல் |
இது எவருக்கு ஏற்புடையதாகும்?இலங்கைப் பெற்றோர்களுக்கு (குறைந்த பட்சம் பெற்றோரில் ஒருவரேனும் இலங்கையராக இருத்தல்) இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளைகளுக்குப் பிள்ளைகளின் பிரசாவுரிமையை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பிலிருந்து குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்குள்ளேனும் இத்திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும். ஒரு வருடத்திற்குள் எனது பிள்ளையின் பிறப்பினைப் பதிவு செய்ய இயலாவிட்டால் என்ன நேரிடும்?பிறப்பு இடம் பெற்ற திகதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் பிறப்பினைப் பதிவு செய்யத் தவறினால் வருடத்திற்கு குறிப்பிட்டத் தொகை படி அபராதம் விதிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
- பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற நாட்டில் விநியோகிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ். (பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி ஆங்கில மொழியில் இல்லாவிடின், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இணைக்கப்படல் வேண்டும்.)
- இலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட கொன்சியுலர் பிறப்புச் சான்றிதழ் அல்லது பின்வரும் விபரங்களை உள்ளடக்கியதாக அண்மையிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் விநியோகிக்கப்பட்ட கடிதம்.
- பிள்ளையின் பெயர்
- பிறந்த திகதி
- ஆண் / பெண் பால்நிலை
- தகப்பனின் பெயர்
- தகப்பனின் இனம்
- தாயின் முதற் பெயர்
- தாயின் இனம்
- பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரி (தகப்பன் அல்லது தாய்) இலங்கையில் பதிவுப் பிரசையெனில் ஏற்புடைய சான்றிதழ்
- பெற்றோர்களின் விவாகச் சான்றிதழ்
- பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற வேளையில் வெளிநாட்டு வதிவினை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோர்கள் பாவித்த கடவுச்சீட்டு ஆவணங்களும் வீசா அனுமதிப் பத்திரமும்.
- விண்ணப்பதாரி (தகப்பன் / தாய்) பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற வேளையில் இலங்கையைத் தவிர்ந்த வேறொரு நாட்டில் பிரசாவுரிமை பெற்றிருக்கவில்லை என்பதற்கான வெளிப்படுத்தல்.
குறிப்பு: (2-7 ற்கான ஆவணங்களின் மூலப்பிரதிகளுடன் நிழற் பிரதிகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்)
விண்ணப்பப் பத்திரத்தைப் பெறக்கூடிய இடங்கள்
- குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம், பிரசாவுரிமைப் பிரிவு, 2ம் மாடி, "சுகுறுபாய", பத்தரமுல்லை.
- வதியும் நாட்டின் இலங்கைத் தூதரகம்
- விண்ணப்பப் பத்திரத்தின் அச்சுப் பிரதியைப் பெற்றுக்கொள்ள இங்கே சுடக்கவும்.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் பிரசாவுரிமைப் பிரிவு விண்ணப்பப் பத்திரங்களை பரிசீலனை செய்து விண்ணப்பதாரிக்கு அனுப்பிவைப்பதற்காக சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கும். தயாரித்தல் கட்டணங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இந்த இடத்தில் சுடக்குக. விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு ஒப்படைக்கலாம்?
- முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை அவசியமான ஆவணங்களின் மூலப் பிரதிகள் மற்றும் நிழற்பிரதிகளுடன் கொழும்பிலுள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்தின் பிரசாவுரிமைப் பிரிவுக்கு ஒப்படைக்கவும்.
- பிள்ளையின் பிறப்பு இடம்பெற்ற நாட்டின் இலங்கைத் தூதரகத்தினூடாக முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரங்களை அவசியமான ஆவணங்கள் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் சமர்ப்பிக்கலாம்.
குறிப்பு:
- குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள் பிறப்பினைப் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அபராதம் விதிக்கப்படும்.
- வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் போது தூதரகத்தின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரொருவர் மூலமாக ஆவணங்கள் அனைத்தையும் அத்தாட்சிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதோடு அவ்வுத்தியோகத்தரின் கையொப்பமும் இறப்பர் முத்திரையும் இதில் இடப்படல் வேண்டும்.
பிறப்பினைப் பதிவுசெய்தல் - கட்டணம்
|
இலங்கைக்கு வெளியில் பிரந்த பிறப்பினை இலங்கை பிரசையாக பதிவுசெய்தல்.
|
(இலங்கை) ரூபா
|
உரிய காலப் பகுதிக்குள் தயாரித்த விண்ணப்பப் பத்திரத்திற்காக (பிறப்பில் இருந்து ஒரு வருட காலப் பகுதிக்குள்)
|
5,750
|
தாமதித்த விண்ணப்பப் பத்திரமொன்றுக்காக ஒரு வருடத்திற்கு
|
500
|
|
கட்டண முறை
|
விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைக்கும் போதே கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். பின்னர் விசாரிப்பதற்காக பற்றுச்சீட்டினை வைத்துக்கொள்ளல் வேண்டும்.
|
|